ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது
செவ்வாய், 4 மே 2010 (10:49 IST)
ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில ் லஸ்கர ் இ தொய்ப ா தீவிரவா த இயக்கத்த ை சேர்ந் த முகமது ஜியாஉல்ஹக் என்பவன ் பதுங்க ி இருப்பத ை கண்டுபிடித்த ு காவல்துறையினர ் கைத ு செய்தனர ். செய்தியாளர்களிடம ் இந் த தகவல ை தெரிவித் த காவல்துற ை ஆணையர ் வ ி. க ே. கான ், கைத ு செய்யப்பட் ட தீவிரவாத ி முகமது ஜியாஉல்ஹக ், ஹைதராபாத ், செகந்த ிர ாபாத் உள்பட பல்வேற ு இடங்களில ் குண்டுவெடிப்புகள ை நிகழ்த் த திட்டமிட்ட ு இருந்ததா க கூறினார ். அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதி முகமது ஜியாஉல்ஹக்கின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் என்று கூறிய காவல்துறை ஆணையர் ஏ.கே.கான், வேலைக்கான சவூதி அரேபியா நாட்டிற்கு சென்றிருந்தபோது லஸ்கர் இ தொய்பா தளபதி அப்துல் அஜித்துடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள லஸ்கர் இ தொய்பா தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்ற முகமது ஜியாஉல்ஹக், அங்கிருந்து ஹைதராபாத்திற்கு வந்து குண்டுவெடிப்புகளை நடத்துவதற்காக காத்திருந்த நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும் அவர் கூறினார். முகமது ஜியாஉல்ஹக்வுடன் தீவிரவாதிகள் மேலும் சிலர் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் ஹைதராபாத் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.
செயலியில் பார்க்க x