அது குழந்தை

திங்கள், 28 ஏப்ரல் 2008 (11:32 IST)
உ‌ன்னத‌ம் எ‌ன்ற ‌சி‌ற்‌றித‌ழி‌ல் வெ‌ளியான பசுவ‌ய்யா‌வி‌ன் க‌விதை...

மொழியை வலையாக மாற்றி

வீசிப்பிடிக்க முயன்றபோது

கிழித்துக்கொண்டுவெளியே

ஒடிற்று உண்மை

பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்

பலன் இல்லை

முச்சுத் திணறி சோர்ந்து சரிந்தேன்

பின் ஏதேதோ யோசனைகள்

தூக்கம்

கண் விழித்ததும் குழந்தைபோல்

மார்பில் அமர்ந்திருந்தது உண்மை

மௌனம் பிடிக்கும் என்றது

அதிகம் பிடிப்பது

அன்புதான் என்று

சொல்லிச் சிரித்தது.

(நன்றி: உன்னதம், ஏப்.94, இதழ்)

வெப்துனியாவைப் படிக்கவும்