தக்காளி புலாவ்

வெள்ளி, 12 மார்ச் 2010 (17:03 IST)
தேவையானப் பொருட்கள் :

தக்காளி - 1/4 கிலோ
பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி - 20 கிராம்
பூண்டு - 1 முழுப் பூண்டு
பச்சை மிளகாய் - 6
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலை இரண்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தனியா தூள் - 2 தே‌க்கர‌ண்டி
புதினா - 2 கைப்பிடியளவு

செய்முறை :

பச்சை மிளகாயை வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீண்ட வாக்கில் வெட்டுங்கள். தக்காளியைப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள்.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டுத் தாளியுங்கள். இதில் புதினா, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

இந்த மசாலா கலவையில் பாசுமதி ஆரிசியைப் போட்டு, ஒரு தம்ளர் அரிசிக்கு ஒன்றரை தம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் விட்டு குக்கரை மூடுங்கள்.

எரியும் அடுப்பின் மீது தவாவை (தோசைக்கல்லை) வைத்து அதன் மேல் குக்கரை வையுங்கள். குக்கரில் வெ‌யிட் போடக் கூடாது. இதுதான் தம் போடும் முறை. 20 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பிலிருந்து இறக்‌கி ப‌ரிமாறு‌ங்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்