×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழ் ஈழம் பிறக்கவும் : தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
திங்கள், 13 ஏப்ரல் 2009 (15:51 IST)
உலகத் தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் வகையில் தமிழ் ஈழம் பிறக்கவும் என்று தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பூக்கள் பூத்துக்குலுங்கும் தமிழ்ப் புத்தாண்டு திருநாளில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதாரி ஆண்டு, தீவிரவாத ஆண்டாய், பொருளாதார சீரழிவு ஆண்டாய், தமிழினத்தை அழிக்கும் ஆண்டாய் வந்து சென்றது. இன்று பிறக்கும் விரோதி ஆண்டு வளமிக்க ஆண்டாய் மலர்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் அமைதி தழைக்கவும், செல்வம் செழிக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த புத்தாண்டில் ஊக்கமுடன் உழைப்போம், தடைகளை தகர்த்தெறிவோம். சுயநலத் துரோகிகளை தூக்கி எறிவோம், உரிமைகளை மீட்போம், தமிழினம் வாழ வழி வகுப்போம் என்று சூளுரைத்து தரணி வாழ் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சித்திரை இத்தரை மீதில் முத்திரை பதித்திடும் நாள் இந்நாள். புதுப்பொழிவும், பொன்விடியலும் தந்து நற்பொழுதுபுலரும் என்ற நம்பிக்கையுடன் மலர்ந்துள்ள சித்திரை உலகத் தமிழர்களின் உள்ளம் எல்லாம் குளிரும் வகையில் தமிழ் ஈழம் பிறக்கவும், தமிழர் தாக்கம் தணியவும், ஈழத் தமிழர் இன்னல் தீரவும், தாய்த் தமிழகத்தின் குமுறல் நீங்கவும் வழிவகுக்கட்டும் என்று வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
செயலியில் பார்க்க
x