3 நாள் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:08 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்ற நிலையில் இன்று திடீரென சரிந்து உள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 86 புள்ளிகள் சரிந்து 65,005 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 38 புள்ளிகள் சார்ந்து 19,308 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான்  இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக ஆலோசனை செய்து முதலீடு செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்