‌பிப்ரவ‌ரி 6, கௌதம் - அ‌ஜித் படபூஜை

செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (16:52 IST)
கௌதம் வாசுதேவ மேனன், அ‌ஜித் இணையும் புதிய படத்தின் பூஜை ‌பிப்ரவ‌ரி 6 நடக்கிறது. ஏ.எம்.ரத்னம் படத்தை தயா‌ரிக்கிறார்.
FILE

சூர்யாவை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த துருவ நட்சத்திரம் சூர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பூஜையோடு நின்றது. சூர்யா லிங்குசாமியின் அஞ்சானில் நடிக்கப் போனார். கௌதம் சிம்புவை நாயகனாக்கி ஒரு திடீர் படத்தை ஆரம்பித்தார். அதன் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கௌதமை சந்தித்த அ‌ஜித் அவருக்கு கால்ஷீட் தர தயாராக இருப்பதாகச் சொல்ல, கௌதமும் தன்வசமிருந்த கதையை அ‌ஜித்திடம் கூறினார். அ‌ஜித்துக்கு ஓகே. ஏ.எம்.ரத்னம் படத்தை தயா‌ரிப்பார் என முடிவானது.

இந்த மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்புக்கு கிளம்புவது என முடிவு செய்துள்ளனர். அனுஷ்கா அ‌ஜித்தின் ஜோடியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக வருகிற 6ஆம் தேதி படத்தின் பூஜையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் கார்த்திக் நடிப்பார் என்றொரு பேச்சு உள்ளது. கார்த்திக் தற்போது கே.வி.ஆனந்தின் அனேகனில் தனுஷுக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்