அஞ்சலியை எப்படியும் தன்னுடைய ஊர்சுற்றி புராணத்தில் நடிக்க வைப்பது இல்லையேல் கம்பிக்கு பின்னே தள்ளுவது. இந்த ஒரே நோக்கத்தில் கோர்ட்டுக்குப் போன மு.களஞ்சியத்துக்கு அப்படியொன்றும் எளிதில் காரியம் கைகூடுவது போல் தெரியவில்லை. அஞ்சலி நேரில் ஆஜராவதற்கு இடைக்கால தடை தந்திருக்கிறது நீதிமன்றம்.
FILE
பஞ்சாயத்துக்குப் பின்னால் கோpயர் என்னாவது? இந்த ஞானோதயத்தின் காரணமாக ஊர் சுற்றிபுராணத்தை தள்ளி வைத்து ஆனந்த மழையில் நடிக்க சம்மதித்திருக்கிறhர்.
ஆனந்த மழையை சுப தமிழ்வாணன் இயக்குகிறhர். இந்தப் படத்தில் மு.களஞ்சியத்துக்கு இரண்டு வேடங்கள்.
இரண்டையும் முற்றிலும் வித்தியாசமான கெட்டப், பாடிலாங்குவேஜ; என்று உருவாக்கியிருக்கிறhர்கள். ஆனால் இவர் படத்தின் நாயகன் கிடையாது. அப்புறம்..?
FILE
படத்தில் மொத்தம் 3 நாயகர்கள். ஜெய் ஆனந்த், சிவா மற்றும் படத்தின் இயக்குனர் சுப தமிழ்வாணன். மு.களஞ்சியத்துக்கு முக்கியமான வேடம். ஹீரோயின்கள் விகீதா, ஸ்ரீஜாஎன்று புதுமுகங்கள்.
அனைவரும் புதுமுகங்கள் என்பதால் தெரிந்த முகமாகிய களஞ்சியத்தை முன்னிறுத்தி படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள். முதல் ஷெட்யூல்ட் தஞ்சையில் தொடங்குகிறது.