நடிகர் தற்கொலை - மனமுடைந்த ரசிகரும் தற்கொலை

சனி, 11 ஜனவரி 2014 (12:29 IST)
நடிகர்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்ளும் மூடத்தனம் இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று. தனி மனித துதியின் நேரடி விளைவுதான் இந்த தற்கொலை மடத்தனம்.
FILE

சமீபத்தில் இளம் நடிகர் உதய்கிரண் தற்கொலை செய்து கொண்டார். அவரின் குடும்பத்தினரே கண்ணீரை துடைத்துவிட்டு அடுத்த காரியத்தை பார்க்க போய்விட்டனர். ஆனால் ஒரு முட்டாள் ரசிகர் உதய்கிரணின் இழப்பை தாங்க முடியாமல் தன்னை கொலை செய்திருக்கிறார்.

அந்த ரசிகருக்கு 19 வயதே ஆகிறது. விஜயநகரம் அருகேயுள்ள கொம்மட்டபள்ளி சந்திப்பிலுள்ள மரத்தில் சதீஷ் என்ற அந்த ரசிகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் பாக்கெட்டில், உதய்கிரண் தற்கொலை செய்து கொண்டதால் நானும் அந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒருவேளை யாரேனும் சதீஷை கொன்று தற்கொலை போல் செட்டப் செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்