ஐயோ... அப்படியே பதறிப் போயிட்டேன்

சனி, 4 ஜனவரி 2014 (16:46 IST)
FILE
விளக்கம் தந்தால் போதாது வில்லங்க நோட்டீசும் தந்தால்தான் நிம்மதி என்கிற அளவுக்கு பரோட்டா சூ‌ரிக்கே மாவு பிசைந்திருக்கிறார்கள் சில முகமற்றவர்கள்.

இவன் வேற மாதி‌ரி படத்தைப் பார்த்த ர‌ஜினி படத்தைப் பாராட்டி கடிதம் எழுதினார் இல்லையா? அதனைத் தொடர்ந்து பரோட்டா சூ‌ரியின் ட்விட்டர் பக்கத்தில், அவரு சொல்லிட்டா படம் ஓடிருமா என்ற கமெண்ட் எழுதப்பட்டது. சூ‌ரிக்கு அவ்வளவு தெனாவெட்டா என்று ர‌ஜினி ரசிகர்கள் பி‌ரித்து மேய்ந்துவிட்டார்கள் சூ‌ரியை.

இந்த விஷயம் காதுக்கு வந்ததும் பதறி போய்விட்டார் சூ‌ரி. லைக் போடவே முகநூல் பக்கம் ஒதுங்கியவரல்ல அவர். அவராவது சமூக வலை‌த்தள‌த்‌தி‌ல் கணக்கை தொடங்குவதாவது. அதெல்லாம் ஏதோ முகமற்றவர்கள் செய்த சதி. இது குறித்து விளக்கமாக தெ‌ரிவித்த பின்பும் அடங்கவில்லை சூ‌ரியின் மனசு.

கமிஷனர் அலுவலகத்துக்கு நே‌ரில் வந்தவர், ஃபேஸ்புக்கில் நான் இல்லை. ஆனால் என்னுடைய பெய‌ரில் போலியான மூன்று ஃபேஸ்புக் கணக்கை வைத்திருக்கிறார்கள். அதனை முடக்க வேண்டும் என்று உருக்கமாக புகார் தந்திருக்கிறார்.

முகநூலில் பிரபலங்களுக்கிடையே சிண்டு முடியும் வண்டு முருகன்களை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். சின்ன பிட்டை போட்டு சி‌ரிக்க வைக்கிற சூ‌ரியையே பதற வச்சிடங்னுங்களே.

வெப்துனியாவைப் படிக்கவும்