பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சாதனை படைத்த தமிழ் திரையிசை கவிஞர்களில் ஒருவர். 29வது வயதிலேயே மரணத்தை தழுவிய அந்த பொதுவுடைமை கவிஞரின் ஊரில் இன்று முதல் 24ஆம் தேதிவரை திரைப்பட விழாவை நடத்துகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
இன்று காலை பட்டுக்கோட்டையில் உள்ள கவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்த பின் ராஜாமணி திரையரங்கில் திரைப்பட விழாவை பட்டுக்கோட்டையாரின் துணைவியார் கவுரவாம்பாள் தொடங்கி வைத்தார்.
இந்த திரைப்பட விழாவில் 15 நாடுகளைச் சேர்ந்த 25 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்திய சினிமாக்களும் இதில் அடக்கம். தினம் ஐந்து படங்கள் என்ற எண்ணிக்கையில் ஐந்து தினங்களில் 25 படங்கள்.
சீனு ராமசாமி, சற்குணம், பாண்டிராஜ் உள்பட பல இயக்குனர்கள் திரைப்பட விழாவையொட்டி அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திரைப்பட விழா நடக்கும் திரையரங்கில் ரசிகர்களின் முன் தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.