யோகி படத்தில் நடிப்பதாலா? கோபத்தைகூட ஒரு கட்டுக்குள் வைக்க தெரிந்திருக்கிறது இயக்குனர் அமீருக்கு. உணர்ச்சி மிகுந்த ஈழத் தமிழர் பிரச்சனையிலும் முதிர்ச்சி நிறைந்துதான் வெளிப்படுகிறது அவரது பேச்சு. அப்படிப்பட்டவரையே கோபப்படுத்தியிருக்கிறார்கள் சிலர்.
யோகிக்குப் பிறகு நடிக்க மாட்டேன், படம்தான் இயக்குவேன் என பேட்டிக்குப் பேட்டி தெளிவுப்படுத்தி வருகிறார். இருந்தும் சிலர் வண்டியேறி அமீரை பார்க்க வந்திருக்கிறார்கள். எதற்கு? நடிகர் அமீருக்கு ரசிகர் மன்றம் திறப்பதற்கு.
தாடிக்கு மீறி வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, அதெல்லாம் வேண்டாம் என்று சோறு போட்டு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த ரசிகர்களை. மன்ற பிரச்சனை இத்துடன் முடியும் என்று தெரியவில்லை. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது தெரிந்த கதைதானே.