மத்தியப் பிரதேசம் செல்லும் மணிரத்னம்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:03 IST)
தமிழிலிருந்து தன்னுடைய கவனத்தை இந்திக்கு முற்றிலுமாக திருப்பிவிட்டார், இயக்குனர் மணிரத்னம். இவரது முந்தையப் படம் குரு, இந்தியில் தயாராகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது தயாராகிவரும் ராவணன் (தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை) இந்தி, தமிழ் இரு மொழிகளில் தயாரானாலும், முக்கியத்துவம் இந்திக்குதான் என்கிறார்கள். காரணம் படத்தின் பட்ஜெட்.

ராவணனுக்குப் பிறகு மணிரத்னம் அனேகமாக ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கின்றன தகவல்கள். ரன்பீர் பிரபல நடிகர் ரி‌ஷ‌ி கபூரின் மகன்.

அறிமுக படமான சாவரியா சரியாகப் போகாவிடினும் ரன்பீருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் மணிரத்னம் ரன்பீரை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ராவணன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மணிரத்னம் ஜனவரியில் மத்தியப் பிரதேசம் செல்கிறார். அங்குள்ள குக்கிராமம் ஒன்றில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் நடிக்கும் காட்சிகளை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்