மீண்டும் நடிப்பில் இறங்கிய எஸ்.பி.பி.

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:22 IST)
எஸ்.பி. பாலசுப்ரமணியன் மகன் எஸ்.பி.பி. சரண் தனது நிறுவனம் மூலம் அடுத்து தயாரிக்கும் படம் 'நாணயம்'. ஷக்தி எஸ். ராஜன் என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரசன்னா ஹீரோவாகவும், சிபிராஜ் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் முதலில் ஹீரோயினாகப் பேசப்பட்டவர் ராகினி.

அதன்பின் அவரின் மலேசியப் பயணத்தால் உடனே சென்னை திரும்ப முடியாததாலும், காலதாமதம் ஏற்பட்டு நிறைய நாட்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டியதாலும் மும்பை மாடல் அழகியான கீர்த்தி குலாரியை தேர்வு செய்து படப்பிடிப்புக்குப் செல்லும் கடைசி நேரத்தில் ராகினி வர, கீர்த்தி குலாரிக்கு 'ஸாரி' சொல்லிவிட்டு ராகினியை படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எஸ்.பி. பாலசுப்ரமணியன் வங்கி அதிகாரியாக நடிக்க இருக்கிறார். படம் பற்றி கேட்டால்... 'சென்னை 28' படத்தைக் காட்டிலும் 'நாணயம்' பிரமாண்ட வெற்றி பெறும் என்கிறார் எஸ்.பி.பி. சரண்.

வெப்துனியாவைப் படிக்கவும்