மீண்டும் தயா‌ரிப்பாளரானார் காவே‌ரி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:52 IST)
தெலுங்கு இயக்குனர் சூர்ய கிரணை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை காவே‌ரி, அத்தியாயம் 6 படத்தை தயா‌ரிப்பதன் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்தப் படம் தயா‌ரிப்பில் இருக்கும் போதே அடுத்தப் படத்தை அவர் தொடங்கியிருப்பது ஆச்ச‌ரியம். ஆக்ரா படத்தை இயக்கிய சித்திரை செல்வன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், சொல்லி தெ‌ரிவதில்லை.

காவே‌ரியின் கணவர் சூர்ய கிரண் படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார். கேள்விக்குறி படத்தில் நடித்த ஜெய்லானி தனது பெயரை மாற்றி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பழைய பெயர் ராசி இல்லையாம். திருமகன் படத்தில் நடித்த ல‌க்சனா ஹீரோயின்.

8ஆ‌ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் இந்தப் படத்தை மனைவி காவே‌ரியுடன் இணைந்து தயா‌ரிக்கிறார், சூர்ய கிரண்.

வெப்துனியாவைப் படிக்கவும்