பாட்டெழுதும் பத்திரிக்கையாளர்கள்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:43 IST)
பல்வேறு இதழ்களில் சினிமா நிரூபராக பணியாற்றியவர் எம்.பி. உதயசூரியன். இவர் முதன் முதலாக இயக்கும் படம் 'உப்பு மூட்டை'. இப்படத்தின் நவீன் நாயகனாக நடிக்கிறார்.

சொத்து தகராறு மற்றும் காதல் கலந்த ஆக்சன் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு இடம்பெறுகிறது. பல்வேறு ஊர்களில் உள்ள 25 ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டுவந்து உண்மையான ஜல்லிக்கட்டை நடத்தி படம் பிடிக்கவுள்ளனர்.

மேலும், இப்படத்தின் இசையை உதயா நீதிதேவன் கவனிக்க, இப்படத்திற்கான பாடல்களை பல்வேறு பத்திரிக்கையில் சினிமா நரூபர்களாக பணியாற்றி வரும் நெல்லை பாரதி, ஏக்நாத், இரா.த. சக்திவேல் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் முக்கிய கேரக்டரில் ஆர்.எஸ். கார்த்திக் நடிக்கிறார். இவரும் ஒரு பத்திரிக்கையாளர்தான்.

இப்படி பத்திரிக்கை நண்பர்களையும் தன்னோடு இணைத்துக் கொண்டு வாய்ப்புக் கொடுத்த உதயசூரியனை இதற்காகவும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்