ராணுவ வீரர்களுக்கு நடிகர்கள் மலரஞ்சலி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:32 IST)
மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகளின் வெறிச் செயலால், நாடே அதிர்ந்து போயுள்ளது. கெட்டதிலும் ஒரு நன்மை. மண்ணின் மைந்தர்கள் என்ற கோதாவில் வட நாட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வந்த தாக்கரே வகையறாக்கள் மீதான மும்பைவாசிகளின் மதிப்பு ச‌ரிந்துள்ளது.

மாறாக தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிய ராணுவ வீரர்கள் மீது பாசத்தை வா‌ி இறைத்திருக்கிறார்கள். போராட்டத்தில் உயி‌ர்நீத்த பாதுகாப்பு வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் ம‌ரியாதையை செலுத்தினர். மும்பையை தாண்டி இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவியிருப்பது சந்தோஷமான விஷயம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உயிர்நீத்த வீரர்களுக்கு இன்று மலரஞ்சலி செலுத்துகின்றனர். நடிகர்கள் மட்டுமின்றி அனைத்து கலையுலகினரும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டு வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்