சந்தியாவின் ஓடிப்போலாமா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக சில வருடங்களுக்கு முன் விளம்பரம் செய்தனர். படத்துக்கு ஓடிப்போலாமா என பெயரும் வைக்கப்பட்டது. சில காரணங்களால் அப்படம் அறிவிப்போடு நின்று போனது.

அதே ஓடிப்போலாமா தலைப்பில் ஒரு படம் தற்போது தயாராகி வருகிறது. ஸ்ரீவாரு பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயா‌ரிக்கும் இந்தப் படத்தை கண்மணி இயக்குகிறார். இசை டி.இமான்.

இந்தப் படத்துக்காக நா.முத்துக்குமார் எழுதிய, வாலுப் பையனே வாலுப் பையனே என்ன செய்கிறாய் என்ற பாடல் சமீபத்தில் ஊட்டியில் படமாக்கப்பட்டது. சந்தியாவுடன் இந்தப் பாடலுக்கு ஆடியவர் புதுமுகம் ப‌ரிமள். இவரை தெ‌ரியாவிட்டாலும் இவரது அக்கா அனைவருக்கும் ப‌ரிச்சயமானவர். உயிர், தனம் போன்ற பிரச்சனைக்கு‌ரிய படங்களில் நடித்த சங்கீதாவின் தம்பி இவர்.

பெற்றோ‌ர்களுக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடும் காதலர்களுக்கு மத்தியில் பெற்றோர்களின் விருப்பத்துக்காக வீட்டைவிட்டு ஓடும் ஒரு காதல் ஜோடி சந்திக்கும் பிரச்சனைதான் படத்தின் கதையாம்.

படத்தின் இன்னொரு ஹீரோயி‌், தொலைக்காட்சி நேயர்களுக்கு நன்கு ப‌ரிச்சயமான அசத்தப் போவது யாரு மகேஸ்வ‌ி.

படத்தின் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்