சி‌ங்களத்தில் பேசிய விஜய்

ல‌ங்கை தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து தனது குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் விஜய்.

தமிழகம் முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே நடந்த போராட்டத்திற்கு விஜய் தலைமை தாங்கினார். காலையில் உண்ணாவிரதத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். விஜய்யுடன் ஏராளமான ரசிகர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், ஏ.சி.சண்முகம், பழ.நெடுமாறன் போன்றோர் விஜய்-க்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவை தெ‌ரிவித்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பேசிய விஜய், இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்பிக்கை தெ‌ரிவித்தார். சிங்களவர்களுக்கு தங்களது கோ‌ரிக்கை பு‌ரிய வேண்டும் என்பதற்காக சிங்கள மொழியில் போரை நிறுத்துமாறு அவர் இலங்கை அரசை கேட்டுக் கொண்டார்.

மாலையில் உண்ணாவிரதத்தை ஷோபா சந்திரசேகரன் முடித்து வைத்தார். விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஸ்ரீமன், விக்ராந்த் இயக்குனர்கள் பேரரசு, ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்