கோவையில் மரியாதை!

புதன், 7 ஜனவரி 2009 (21:21 IST)
அரசியலா? சினிமாவா? எதற்கு விஜயகாந்த் முதல் மரியாதை தருகிறார் என்று கேட்டால், சினிமா என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். ஏனாம்?

நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழர், தமிழகத்தில் தொடர் மின்வெட்டு போன்ற எரியும் பிரச்சனைக்கு சிம்மக் குரல் கொடுப்பார் கேப்டன் என அவரது கட்சியினர் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், முதல் நாள் கையெழுத்து போட்டுவிட்டு கோவையில் நடக்கும் மரியாதை படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் விஜயகாந்த். அவரைப் பொறுத்தவரை சினிமாவில் சீக்கிரமே ஒரு ஹிட் வேண்டும். மரியாதையைத்தான் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார். அப்படியானால் அரசியல்?

அறிக்கை விடுவதற்கு தலைநகரில் கண்டிப்பாக இருக்க வேண்டுமா என்ன!

வெப்துனியாவைப் படிக்கவும்