முக்கிய கதாபாத்திரத்தில கவிப்பேரரசு

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்கள் ஆன காலம் சென்று, தற்போது இயக்குநர்கள் ஹீரோவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பாடலாசிரியர்கள் நடிகர்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்னோடி என்று சொன்னால் கவிஞர் கண்ணதாசனை சொல்லலாம். கருப்பு பணம் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தார். ரத்தத் திலகம் படத்தில் ஒரு கோப்பையிலே பாடலுக்கு நடித்திருப்பார்.

தற்போது பா விஜய் தாய் காவியம் படத்திலும் சினேகன் ஆல்பம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கபிலன் தசாவதாரத்தில் நடித்தார். இப்படி ஆளாளுக்கு திரையில் தோன்றி நடித்துக் கொண்டிருக்க கவிஞர் வைரமுத்துவும் அவ்வப்போது தலைக்காட்டிக் கொண்டிருந்தவர், தற்போது ராஜ்மோகன் இயக்கும் திருவாசகம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். எவ்வளவோ மறுத்தும் இயக்குநரின் அன்பு வேண்டுகோளுக்காகவும், கதையின் முக்கியத்துவம் புரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இது அப்படியே தொடருமா என்பதுதான் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்