மனிதச் சங்கிலி போராட்டம் த‌ள்‌ளிவை‌ப்பு!

முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இன்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி இன்று பிரமாண்ட மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுததிருந்தார் முதல்வர்.

இதில் அனைத்து திரையுலகினரும் கலந்து கொள்வார்கள், தேனாம்பேட்டை அன்பகத்திலிருந்து சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வரை திரையுலகினர் அணிவகுத்து நிற்ப‌ர் என்று போராட்டக் குழு சார்பாக தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் தெ‌ரிவித்திருந்தார்.

மழை காரணமாக மனிதச் சங்கிலி போராட்டத்தை 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் முதல்வர். இதனால் இன்று படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்