சத்யராஜின் 'பேட்டை முதல் கோட்டை வரை'

புதன், 15 அக்டோபர் 2008 (13:49 IST)
ட… கோட்டை ஆசை சத்யராஜையும் விடவில்லை. அவர் நடிக்கும் அடுத்தப் படத்தின் பெயர் 'பேட்டை முதல் கோட்டை வரை'.

எத்தனை நாளைக்குதான் உம்மா உம்மம்மா என்று பாட்டுப் பாடுவது என்று சத்யராஜூக்கே வெறுப்பு. நல்ல கதையம்சம் உள்ள படம் வந்தால் மட்டும் நடித்தால் போதும் என்று அவருக்கு அவரே கட்டுக்பாடு போட்டுள்ளார்.

புதிய படங்கள் எதுவும் அவர் ஒப்புக் கொள்ளாததுக்கு இதுவே காரணம். அடுத்து தங்கர்பச்சான் இயக்கும் 'தொலைந்து போனவர்கள்' படத்தில் நடிப்பவர், 'பேட்டை முதல் கோட்டை வரை' என்ற படத்துக்கும் கால்ஷ‌ீட் கொடுத்துள்ளார்.

இதில் சத்யராஜூடன் நெப்போலியனும், நாசரும் நடிக்கிறார்கள். எம்.ஜமீன்ராஜ் படத்தை இயக்குகிறார். தேவா இசையமைக்கிறார்.

வரும் பதினெட்டாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்