குழந்தைக்காக படப்பிடிப்பை தள்ளிவைத்திருக்கும் அஜீத்

வியாழன், 3 ஜனவரி 2008 (11:55 IST)
webdunia photoWD
அஜீத் அடுத்து நடன இயக்குனர் ராஜுசுந்தரம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஷாருக்கான் நடித்த ஒரு இந்தி படத்தின் ரிமேக்காம்.

ஐங்கரண் மூவிஸ் நிறுவனம் சார்பாக லண்டன் கருணாஸ் இப்படத்தை அதிக பொருட்செலவில்
தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் நடக்க இருப்பதாக இருந்தது. ஆனால் அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு ஜனவரியில் குழந்தை பிறக்க இருப்பதால் அந்த சமயத்தில் தான் உடனிருக்க வேண்டும் என்று அஜீத் நினைக்கிறார்.

இதனால் படப்பிடிப்பை தள்ளிவைத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்