பாவனா செல்போனுக்கு தடா?!

Webdunia
துண்டு துக்கடா நட்சத்திரங்கள் கூட இரண்டு, மூன்று செல்போன்களை வைத்துக் கொள்வது இப்போது பேஷனாகிவிட்டது. ஆனால் பாவனாவின் நிலையோ வேறு மாதிரி... இருக்கிற செல்லையும் பிடிங்கி வைத்துக் கொண்டு மொத்தமாக தடா போட்டுவிட்டார் தாய்க்குலம்!

ஏன்? பாவனாவை வைத்து ஏற்கனவே படம் பண்ணின இயக்குனர் ஒருவர் ராத்திரி பகல் பார்க்காமல் போனைப் போட்டு கடலை போட ஆரம்பித்துவிடுகிறாராம்.

பாவனாவும் பதிலுக்கு கடலை போட பயந்துபோய் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாவனாவை பெத்தவர்கள்! இப்போது சித்திரம் பேசாதபடி பாதுகாப்பு வளையத்தையும் அதிகப்படுத்திவிட்டார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்