உதவித் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி

எ‌ட்டு, 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜே.சி.குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரை டி.கல்லுப்பட்டி‌யி‌ல் உ‌ள்ள கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் பயிற்சி நிலையமான இங்கு, மகளிருக்கான தையல் பயிற்சி, மசாலா பொடி தயாரித்தல், தோல் பொருள், சலவை சோப்பு, மண்புழு உரம், உயிர் உரம் தயாரித்தல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சி, இரு சக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி, ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சியில் சேருபவர்களுக்கு உணவுக்காக மாதம் ரூ.800 உதவித் தொகையாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரங்களுடன் ஜனவரி 15ஆ‌ம் தே‌திக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு முதல்வர், ஜே.சி. குமரப்பா கிராமிய தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம், டி.கல்லுப்பட்டி, மதுரை என்ற முகவரியிலோ அ‌ல்லது 04549-272365 எ‌ன்ற தொலைபே‌சி எ‌ண்‌ணிலோ தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்