சி எஸ் கே வின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனியே பகிர்ந்துகொள்வார்… காசி விஸ்வநாதன் பதில்!

திங்கள், 25 டிசம்பர் 2023 (07:00 IST)
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் தோனிக்குப் பிறகு சி எஸ் கே அணியின் கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பிய போது, அவர் “சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனியே உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வார்” எனக் கூறியுள்ளார். முன்னதாக சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் விலகினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்