நீதிபதி லோயா மரணம்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:16 IST)
நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் கோரி மும்பை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
நீதிபதி லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நான்கு நீதிமன்ற அலுவலர்களின் வாக்குமூலங்களை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 
நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது தான் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் நீதிபதிகளையே சதிகாரர்கள் போல சித்தரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கண்டித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்