ஜிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை கருதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ஜிகா வைரசால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் கருத்தடை, மற்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாக இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.