இறந்து போன தனது காதலி, பாம்பின் உருவில் மீண்டும் வந்து விட்டதாக நம்பும் வாலிபர் ஒருவர், அந்த பாம்புடன் வாழ்க்கை நடத்தும் செய்தி வெளியாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியில் வசிப்பவர் வாரணன் சரசலின். இவரின் காதலி 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின், அவர் ஒரு கோப்ரா பாம்புவை பார்த்தார். அந்த பாம்பு, மறைந்து போன தனது காதலியின் தோற்றத்தில் இருப்பதாய் அவருக்குப் பட்டது.
அவர் கடைபிடிக்கும் புத்த மதத்தின் கூற்றுப்படி, இறந்தவர்கள் விலங்குகளாக மறு பிறவி எடுத்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, தனது காதலிதான் பாம்பின் வடிவில் மறுபிறவி எடுத்துள்ளார் என்று நம்பிய அவர், அந்த பாம்பை தன்னுடனே வைத்துக் கொண்டார்.
அதோடு தூங்குகிறார், தொலைக்காட்சி பார்க்கிறார், கேரம் போர்டு விளையாடுகிறார், செல்லும் இடம் எங்கும் அதை தனது காரில் அழைத்துச் செல்கிறார். அவ்வளவு ஏன்?.. அந்த பாம்புவோடு அவர் பிக்னிக்கும் செல்கிறார். அதோடு பேசிக் கொண்டே, வீட்டில் பொழுதை கழிக்கிறார்.