அந்த பையில் ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த பெண் நான் ஒரு தீவிரவாதி என்றும், என்னை விடவில்லை என்றால் உடலில் கட்டியுள்ள வெடிகுண்டை வெடிக்க செய்வேன் என்றும் மிரட்டினார். இதனால் பீதியடைந்த போலீஸார் தெறித்து ஓடினர். பின்னர் அங்கிருந்து அந்த பெண் குழந்தையின் தலையை கையில் பிடித்தபடி சென்றார். இந்நிலையில் மறைந்து நின்ற போலீஸர் அந்த பெண்ணை கைது செய்தனர்.