அமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல்முறையாக திருநங்கை அதிகாரி நியமனம்

புதன், 19 ஆகஸ்ட் 2015 (18:34 IST)
அமெரிக்க அதிபரின் முதன்மை அலுவலகமான வெள்ளை மாளிகையின் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
 

 
வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக ரப்பி ப்ரீமேன்-குர்ஸ்பேன் என்ற திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்.
 
திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்