கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயார்..சோதனையில் வெற்றி... 10 கோடி மருந்துகள் ஆர்டர் !

திங்கள், 20 ஜூலை 2020 (19:43 IST)
சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப் பரவி கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் இதுவரை  ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பத்து லட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒன்றை லட்சத்திற்கு மேல் பாதிப்பட்டுள்ளனர்.

இந்தத் தொற்றைத் தடுக்கம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், உலகில் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு வளர்ந்து வரும் நாடுகள் வரை கொரொனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பெரும் சிரத்தை மேற்கொண்டு வந்த நிலையில்,  கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்த தடுப்பு மருந்து 1077 பேருக்கு செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்துள்ளதாக சோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.

எனவே சுமார் 10 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது பிரிட்டன்.
இந்த நல்ல செய்தி உலகில் வைரல் ஆகி வருகிறது. அதேசமயம் கொராவுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டதாகப் பலரும் கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்