ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (06:37 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேற அமெரிக்கா முடிவு செய்தது 
 
படிப்படியாக அமெரிக்க ராணுவம் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டுமென தாலிபான்கள் கெடு விதித்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை முழுமையாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆப்கன் சென்ற அமெரிக்க படைகள் 2461 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது ஏராளமான தீவிரவாதிகளை அழித்து தங்களுடைய பணியை முடித்ததாக அமெரிக்கா பெருமிதத்துடன் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கன் நிலைமை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்