1980-களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில், அந்த நாடு மற்றும் தீவிரவாதிகளின் பாதுகாப்பில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. தாவூத் இப்ராஹிமின் பின்னணியில் தான் 1993-ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆனால் இதனை தாவூத்தின் சகோதரர் சோட்டா ஷகீல் மறுத்துள்ளார். 61 வயதான தாவூத் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் இறந்துவிட்டதாக வரும் தகவல் வதந்தி எனவும் அவர் கூறியுள்ளார். தாவூத்தின் சகோதரர் சோட்டா ஷகீலும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஆவார்.