திடீரென ஒரே இடத்தில் கூடிய ஆயிரக்கணக்கான காகங்கள்: பூகம்ப அறிகுறியா?

புதன், 15 பிப்ரவரி 2023 (15:15 IST)
திடீரென ஒரே இடத்தில் கூடிய ஆயிரக்கணக்கான காகங்கள்: பூகம்ப அறிகுறியா?
ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீவில் திடீரென ஆயிரக்கணக்கான காகங்கள் ஒன்று கூடியதால் அந்த பகுதியில் பரம்பரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளில் ஒன்று கியோட்டோ. இங்கு ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக திடீரென சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை என்றாலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பூகம்பம் உள்பட இயற்கை பேரழிவின் அறிகுறி தெரியும் என்பதால் தாகங்கள் அதை அறிந்து கொண்டு தான் இந்த தீவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்