பாகிஸ்தானில் கடந்த டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 150 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மரண தண்டனை தடை சட்டத்தை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் மட்டும் 6 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இம்மாதம் 7ஆம் தேதி ஒரு தீவிரவாதிக்கும், மற்ற 7 தீவிரவாதிகளுக்கு 13,14 மற்றும் 15ஆகிய தேதிகளிலும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.