ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த முக்கியப் பகுதிகளை கைப்பற்றியுள்ளோம்: சிரிய படைகள் அறிவிப்பு

செவ்வாய், 20 அக்டோபர் 2015 (10:13 IST)
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த முக்கியப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக அரசு படைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


 
 
சிரியாவின் அலெப்போவின் பகுதியில்  உள்ள பல முக்கிய நகரங்கள்  ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இதனைக்  கைப்பற்ற சிரிய அரசு படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
 
சிரிய அரசு படைகளுடன் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் அலெப்போ பகுதியில் உள்ள பல முக்கிய நகரங்களை அரசு படை கைப்பற்றியுள்ளதாக சிரிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்