பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் வதைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி, கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.