தென் கொரியாவில் மெர்ஸ் வைரஸ் வேகமாகப் பரவிவருகின்றது, அந்நாட்டில் மெர்ஸ் நோய்க்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 154 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாம்சங் மருத்துவமனையில்தான் மெர்ஸ் நோய் தாக்கிய ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அங்கு பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் 400 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மருத்துவ ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.