மாடல் அழகியின் மார்பை கொத்தி இறந்து போன பாம்பு : வீடியோ பாருங்கள்

வியாழன், 20 அக்டோபர் 2016 (15:51 IST)
மாடல் அழகியின் மார்பில் கொத்திய ஒரு பாம்பு இறந்து போன தகவலும், அந்த வீடியோவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


 

 
ஒரு மாடல் அழகி, தன்னுடைய கையில் ஒரு பெரிய பாம்பை வைத்திருக்கிறார். மோகத்தில் அதை நாக்கால் வருட முயல்கிறார். கொதிப்படைந்த பாம்பு, திடீரென்று அவரின் மார்பில் கடிக்கிறது. இதனால் அந்த அழகி அதிர்ச்சி அடைகிறார். 
 
இதைக் கண்ட உதவியாளர் ஓடிச் சென்று பாம்பை அவரின் மார்பிலிருந்து பிடுங்க முயல்கிறார். ஒரு வழியாக அவர் பாம்பை விடுவித்து விடுகிறார். 
 
ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, அந்த அழகி சிலிகானால் உருவாக்கப்பட்ட செயற்கை மார்பை பொருத்தியிருந்தாகவும், இது தெரியாமல் அங்கு கடித்த பாம்பு, சிலிகானின் விஷம் ஏறி இறந்துவிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்