இதனால் பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்தது விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி காயம் அடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, காலவரையின்றி மூடப்பட்டது. அதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் பிறப்பித்துள்ளார். விடுதிகளில் தங்கியிருக்கும் மருத்துவ சிங்கள மாணவர்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.