துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு ரெசா குல் என்ற பெண்மணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணிபுரியும் தனது மகனைத் தேடிச் சென்றுள்ளார். அங்கு அவரது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்ததைப் பார்த்துள்ளார்.
இதனைக் கண்டு கோபமடைந்த குல், அருகே கிடந்த துப்பாக்கியால் தீவிரவாதிகளை நோக்கிச் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் இணைந்து இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.