திருமணத்துக்கு முன்னர் உடலுறவு - கல்லால் அடித்து ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை

செவ்வாய், 31 மார்ச் 2015 (19:20 IST)
திருமணத்துக்கு முன்னர் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காதலர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.
 

 

ஈராக்கின் மௌசூல் நகரில் காதலர்கள் திருமணத்திற்கு உடலுறவில் ஈடுபட்டதிற்காக கல்லால் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கற்களால் தாக்கி கொல்லப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரினதும் வயது 20-30 க்குள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 

 
பொதுமக்கள் திரண்டிருக்கும் ஒரு இடத்தில் காதலர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் பொதுமக்கள் முன்பே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


 

இது மற்றவர்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக இதை குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தின் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்