மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்!

வியாழன், 17 ஜூன் 2021 (12:47 IST)
மைக்ரோசாப்ட் செயல் அதிகாரியாக இருந்து வரும் சத்யா நாதெள்ளா தற்போது மைக்ரோசாப்ட் நிறுவன தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்து வருபவர் இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெல்லா. இவர் மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பதவியேற்றபோது மைக்ரோசாப்டின் மொபைல் பிரிவு, தேடுபொறி என்ஜின் ஆகியவை வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் கள்வுட் ஸ்டோரேஜ் போன்றவற்றின் பக்கம் கவனத்தை திருப்பி நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் சத்யா.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக முன்னதாக பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் மட்டுமே பதவி வகித்திருந்த நிலையில் முதன்முதலாக இந்தியரான சத்யா நாதெள்ளா தலைவர் பதவியை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்