லண்டனில் ஜெகந்நாதர் கோவில் கோயில் கட்ட....இந்திய தொழிலதிபர் ரூ. 250 கோடி நிதியுதவி

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:17 IST)
லண்டனில் கோயில் கட்டுவதற்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 250 கோடி  நிதியுதவி செய்துள்ளார்.

இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா, லண்டன் ஆகிய நாடுகளில் அதிகளவில் பரவியுள்ளனர்.

இந்த நிலையில் லண்டனில் குறிப்பிட்ட அளவில் இந்தியர்கள் வசித்து வரும் நிலையில்,  அங்கு  ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.

இதற்குப் பலரும்  நிதியுதவி செய்து வரும் நிலையில், ஒடிஷா மாநிலத்தைச்  சேர்ந்த பைனஸ்ட் என்ற  கம்பெனியின் நிறுவனர்ன் இக்கோவில் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

மேலும், இந்தக் கோயில் கட்ட ரூ.70 கோடியில், 15 ஏக்கர் நிலம் நிலம்வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்