கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள்! – ரஷ்யாவிற்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

ஞாயிறு, 13 மார்ச் 2022 (13:11 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போர் தொடங்கி 18 நாட்களை கடந்து விட்ட நிலையில் அனைத்து தடைகளையும் மீறியும் ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது.

போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போப் பிரான்சிஸ் “போரினால் அனாதையாக்கப்படும் குழந்தைகளின் நிலையை எண்ணி பாருங்கள். போரை நிறுத்துவதற்கான வழி கிடைக்கும். கடவுளின் பெயரால் தயவு செய்து போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்