இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த மீசாலையில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர் ஒருவர், ஏராளமான சீதனத்துடன் தரகர் மூலம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காக தனது உறவினர்கள் சகிதம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மேலும், அந்த குறித்த நபர் ஏற்கனவே ஏராளமான பெண்களுடன் மன்மத விளையாட்டுக்களை புரிந்து அவர்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியவர் என தெரியவந்தது. எனவே, பெண் பார்க்க வந்தவரை நெருங்கிய உறவினர், அங்கு நின்றவர்களுக்கு தெரிவிக்கவே பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிளையை தாக்கியுள்ளனர்.
அடிமேல் அடிவிழ அவர் தனது கைப்பேசியை அங்கேயே போட்டுவிட்டு தனது தாய், தந்தை உறவினர்களை விட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பெண்ணின் உறவினர்களிடத்தில் சிக்கிய மாப்பிளையின் உறவுகள் பலத்த கெஞ்சல்களுக்கு மத்தியில் தாக்குதலில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர்.