பாகிஸ்தானின் இந்த பச்சாகான் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 3000 பேர் உள்ளனர். இன்று காலை பல்கலைக்கழக சுற்று சுவர் வழியாக உள்ளே குதித்த தீவிரவாதிகள் கண்ணில் பட்டவரை எல்லாம் சுட ஆரம்பித்தனர். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர்.