பள்ளி மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்வு

வியாழன், 18 டிசம்பர் 2014 (13:51 IST)
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியானார்கள். இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 7 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 132 பேர் பள்ளி குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்