பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தில், ஒரு முக்கிய சாலையில் போலீசாரின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நிலை தடுமாறி, தெரியாமல் ஒரு போலீசாரின் வாகனத்தில் மோதிவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த வாலிபரை பிடித்து சராமரியாக அடித்தார். அவரின் வயிற்றில் எட்டி உதைத்தார். இதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டார். இதைக் கண்ட அனைவரும், அந்த போலீசாரின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.